சென்னை: ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தது. இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் சேர்ந்து தயாரிக்கின்றன. டைட்டில் வைக்கவில்லை. ஆக்ஷனுக்கும், பேமிலி சென்டிமென்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாக்கப்படுகிறது. தற்போது ‘மார்க் ஆண்டனி’ என்ற பான் இந்தியா படத்தில் விஷால் நடிக்கிறார். இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதையடுத்து விஷால் நடித்து இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ என்ற படத்துக்கான ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அவர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இது விஷால் நடிக்கும் 34வது படமாகும். கடைசியாக ஹரி இயக்கிய ‘யானை’ படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்திருந்தனர்.
146