சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது கிரிக்கெட் வீரரை மனதிற்குள் காதலித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, விஷால் ஜோடியாக ‘ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ ஆர்யாவின் ‘கேப்டன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டர் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அதேபோல் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ‘கட்டா குஸ்தி’ படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தமிழிலும் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறாராம். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஐஸ்வர்யா லட்சுமி, ‘நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மனதளவில் காதலித்தேன். ஆனால் இப்போது எனக்கு கிரிக்கெட் பார்க்க நேரமில்லை. விஜய் மற்றும் அபிஷேக் பச்சன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆசை. எந்த மாதிரியான வேடத்திலும் நடிப்பேன். ஆனால் வில்லியாக மட்டும் நடிக்க மாட்டேன்’ என்றார்.
223