தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரி நடத்தி வருகிறார் ஆண்ட்ரியா. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஜூலை 1ம் தேதி இசை கச்சேரி நடத்துகிறார். இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா கூறியதாவது: கோலாலம்பூரில் கடைசியாக நடந்த இசைக்கச்சேரி நன்றாக நடைபெற்றது. தொடர்ந்து கோவையில் வரும் 1ம் தேதி இசைக்கச்சேரி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது.
இளையராஜா பாடல்களும், நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெறுகிறது. கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம். நடிப்பு, பாடல் எதுவுமே ஈசி இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் பாடல் பயிற்சி பெற்றதால் தற்போது ஈசியாக பாடுகிறேன் என்றார். அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ‘அரசியல் பற்றி கேட்காதீர்கள். நான் கோவைக்கு பாடத்தான் வருகிறேன். அரசியல் கட்சி தொடங்க வரவில்லை’ என்று கோபமாக கூறினார்.