சென்னை: சமந்தா வேலூர் தங்க கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. வேலூர் தங்க கோயிலுக்கு நடிகை சமந்தா காரில் சென்ற புகைப்படங்கள், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு ெசல்லும் வழிநெடுக எடுத்த செல்பி புகைப்படத்தையும் சமந்தா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும், அவர் காரில் சாலை வழியாக செல்லும்போது தமிழ் சினிமா பாடல்களை கேட்டு செல்லும் வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார். வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு சென்ற அவர் சுவாமி தரிசனம் செய்து திரும்பி உள்ளார்.
அங்கு உள்ள மத குருமாரிடம் ஆசி பெற்ற அவர், பிறகு அந்த பொற்கோயிலில் உள்ள சுவர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். கோயில் நிர்வாக ஊழியர்கள் சமந்தாவிற்கு நல்ல முறையில் உபசரிப்பு அளித்து சிறப்பித்தனர். தற்காலிகமாக படப்பிடிப்புகளிலிருந்து விடுமுறை எடுத்துள்ள சமந்தா, தற்போது தனது மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அத்துடன் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளிலும் ஈடுபடுகிறார். அதில் ஒரு பகுதியாகத்தான் வேலூர் தங்க கோயிலுக்கு அவர் சென்றிருக்கிறார்.