40
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாகவும், வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் எஸ்.பி.பி.் மகன் சரண் நேற்று இரவு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
எனது தந்தைக்கு கொரோனா நெகட்டிவ் என வெளிவந்த தகவல் தவறானது. 2 வாரங்களுக்கு பிறகு இன்று அப்பாவை சந்தித்தேன். என்னை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். கையை உயர்த்தி தம்ஸ்அப் காட்டினார். என் அம்மாவின் உடல்நலம் குறித்து சைகையில் விசாரித்தார். அவர் நிச்சயம் குணம் பெற்று திரும்புவார் என கூறியுள்ளார்.