சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் சமந்தா. ஒரு புறம் பாடலை கோடிக் கணக்கான மக்கள் ரசித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. என்றாலும் சமந்தா மகிழ்ச்சியில் இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்பதாவது: நான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தேன், சில மோசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன், சீரியஸாகவும் நடித்துள்ளேன். ஒரு தொகுப்பாளராகவும் இருந்துள்ளேன். தான் செய்யும் எல்லா வேலைகளிலும் சிறந்து விளங்க நான் கடினமாக உழைத்து வருகிறேன். கவர்ச்சி என்பது கடினமான வேலை. அதையும் செய்து வருகிறேன். விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் பாடலை கொண்டாடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்கிறார் சமந்தா.
33