பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மல்லிகா ஷெராவத். தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல், சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் தமிழ் படம் மூலம் மீண்டும் அவர் நடிக்க வருகிறார். வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகும் படம் பாம்பாட்டம்.இதில் ஜீவா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதையொட்டி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத் தேர்வாகியுள்ளார். படத்தில் அவர் ராணி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மேலும் 2 ஹீரோயின்கள் நடிப்பார்கள் என தெரிகிறது.
35