மகாமுனி வெற்றியை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சுந்தர்.சி யின் அரண்மனை-3 படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியது.இந்நிலையில் ஆர்யாவின் 30-வது படத்தை கபாலி, காலா படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்குகிறார. காலா படத்தை தொடர்ந்து பாலிவுட் படத்தை ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமலே உள்ளது.இந்நிலையில் ஆர்யாவை வைத்து பா.ரஞ்சித் இயக்க திட்டமிட்டிருக்கும் இதில் பாக்ஸிங்கை கதைகளாமக அமைத்திருக்கிறார். இப்படம் குறித்து பேசியுள்ள ஆர்யா, என்னுடைய திரை வாழ்க்கையில் சவால் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு சல்பேட்டா என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்க உள்ளார்.
35