சென்னை: அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்டதால், அடுத்த படத்தை உடனே தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதனால், பல ஹீரோக்களை பார்த்து அவர்களிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார். அஜித் வேண்டாம் எனக்கூறிய கதையை விஜய் சேதுபதியிடம் சொன்னார் விக்னேஷ் சிவன். நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என விஜய் சேதுபதி சொல்லிவிட்டாராம். ஆனால், அவரது கால்ஷீட் இப்போதைக்கு கிடைக்காது என்றும் இந்த ஆண்டு முழுவதும் அவர் பிசியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால், காதல் கதை கொண்ட ஒரு படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்காக பிரதீப் ரங்கநாதனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். லவ் டுடே படத்துக்கு பிறகு அடுத்த படத்தை கவனமாக தேர்வு செய்ய விரும்புகிறார் பிரதீப் ரங்கநாதன். இதனால், அவர் உடனே கால்ஷீட் தர சம்மதிக்கவில்லையாம். முழு ஸ்கிரிப்ட் கொடுத்தால், படித்துவிட்டு சொல்கிறேன் என கூறியுள்ளாராம். இதனால், அவரிடம் ஸ்கிரிப்ட் தருவதற்காக அதை எழுதும் பணியில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார்.
பிரதீப் ரங்கநாதனிடம் கால்ஷீட் கேட்கும் விக்னேஷ் சிவன்
0 comment
134