ஹீரோவுக்கு சமமாக ஹீரோயின்களுக்கும் சம்பளம் தர வேண்டும் என்று ஒரு சில நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் கோடிகளில் சம்பளமும் பெறுகின்றனர். ஆனால் நடிகை ராஷ்மிகா வேறுவொரு பார்வையை முன்வைத்திருக்கிறார். டியர் காம்ரேட் படத்தில் விஜயதேவரகொண்டாவுடன் நடித்த ராஷ்மிகா தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: வெற்றி படங்களில் நடித்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். வெற்றி உற்சாகம் தரும். ஆனால் வெற்றி, தோல்வி இரண்டையும் நான் ஒரே கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறேன். நாம் நடித்த படம் வெற்றி பெற்றுவிட்டால் அதற்காக மற்றொரு புதிய படம் வரலாம், சம்பளமும் அதிகம் உயரலாம். இன்னொரு பட வாய்ப்பும், அதிக சம்பளமும் மட்டுமே முக்கியம் இல்லை என்பது எனது எண்ணம். படத்திற்காக உழைத்த உழைப்பும் அதில் பெற்ற அனுபவமும்தான் முக்கியம். ஹீரோக்கள் சம்பளம் பற்றி கேட்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடையே சம்பளத்தில் வித்தியாசம் இருக்கலாம். படத்தை பொறுத்தவரை அதனால் ஏற்படும் பலன் ஹீரோக்கு மட்டுமே செல்கிறது என்று சொல்ல முடியாது, ஹீரோயின்களுக்கும் அந்த பலன் வருகிறது. ஆனால் பிரச்னை என்று வரும் போது சில நேரங்களில் அது ஹீரோக்களை மட்டுமே பாதிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
37