ஐதராபாத்: திரைக்கு வந்து 5 மாதங்கள் கடந்த நிலையில் இப்போது புதிய சாதனை படைத்துள்ளது ஆர்ஆர்ஆர் படம். கடந்த மார்ச் 24ம் தேதி ஆர்ஆர்ஆர் படம் திரைக்கு வந்தது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட் நடித்த இந்த படத்தை ராஜமவுலி இயக்கினார். பாக்ஸ் ஆபீசில் ரூ.1000 கோடியை தாண்டி வசூலித்தும் பல்வேறு சாதனைகள் புரிந்தும் இந்த படம் மக்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்போது படம் வெளியாகி இத்தனை நாட்களுக்கு பிறகும் ஒரு புது சாதனை படைத்துள்ளது. அதன்படி நெட்பிளிக்சில் திரையிடப்பட்டு, 14 வாரங்களாக இந்த படம் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. அதாவது உலக அளவில் அதிகம் பேர் பார்த்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழு நேற்று வெளியிட்டது.
5 மாதங்களுக்கு பிறகும் புதிய சாதனை படைத்த ஆர்ஆர்ஆர்
0 comment
37