மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அக்ஷய் குமார். இந்திய நடிகர்களில் அதிக வரி செலுத்துபவர் இவர்தான். ஷாருக்கான் கூட இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார். ஒரு வருடத்தில் 4 படங்களில் அக்ஷய் குமார் நடிப்பார். அந்த 4 படங்களுமே ஹிட்டாகிவிடும். இதுபோல் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு வரை 13 படங்களை வெற்றி படங்களாக அவர் கொடுத்தார். இதையடுத்து தயாரிப்பாளர்கள் பலரும் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பெல்பாட்டம், பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்ஷா பந்தன் ஆகிய 4 படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வந்து தோல்வியை தழுவியுள்ளன. அடுத்தடுத்த தோல்விகளால் அக்ஷய் குமார் நடித்து வரும் படே மியான் சோட்டே மியான் படத்தில் அவரது சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. தோல்வி அடைந்த 4 படங்களும் தியேட்டர்களில் வெளியானவை. இதனால் அக்ஷய் குமார் இப்போது புது முடிவுக்கு வந்திருக்கிறார். அடுத்த படத்தை ஓடிடிக்கு விற்று, தயாரிப்பாளருக்கு லாபத்தை தரலாம் என திட்டமிட்டுள்ளார். தியேட்டரில் வெளியாகி, பெரிய நஷ்டத்தை அடைவதை விட, ஓடிடியில் வெளியாகி சிறு லாபம் வந்தாலும் சந்தோஷம்தான் என அக்ஷய் குமார் கூறுகிறாராம். தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக்கான கட்புத்லி படத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இதில் ரகுல் பிரீத் சிங் ஹீரோயின். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வரும் செப்டம்பர் 2ம் தேதி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 படங்கள் தொடர் தோல்வி ஓடிடிக்கு மாறினார் அக்ஷய் குமார்
0 comment
34