சென்னை: நாட்டை உலுக்கிய உண்மைச் சம்பவ அடிப்படையில் உருவான திரில்லர் கதை கொண்ட படம், ‘ஃபைண்டர்’. இதன் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா இணைந்து வெளியிட்டனர். இப்படத்தை அரபி புரொடக்ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம், விஜயன் வென்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் சேர்ந்து தயாரித்துள்ளனர். பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு செய்ய, சூர்ய பிரசாத் இசை அமைத்துள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
அமெரிக்காவில், செய்யாத குற்றத்துக்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை தேடிக் கண்டுபிடிக்கிறது ஒரு நிறுவனம். அவர்களை நிரபராதிகள் என்று நிரூபித்து, அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை வாங்கி கொடுக்கும் வேலையை செய்கிறது. இந்நிறுவனத்தைப் பற்றிய உண்மைச் சம்பவ அடிப்படையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மை வேடத்தில் சார்லி மற்றும் வினோத் ராஜேந்திரன், சென்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், பிரானா ஆகியோர் நடித்துள்ளனர்.