சென்னை: ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ள படம் ‘சைரன்’. ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெயம் ரவி பேசியதாவது: எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம் இது. இந்தப் படத்தை வேறொரு தயாரிப்பாளரை வைத்து தயாரிக்கலாம் என்று நினைத்தபோது சுஜாதா அம்மா விடவே இல்லை. கண்டிப்பாக நான் தான் பண்ணனும் என்று பிடிவாதமாக இருந்தார். ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும், அந்த நம்பிக்கை அவரிடம் இருந்தது.
இந்த படத்தில் ஹீரோயின், ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சுரேஷ் சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. அனுபமா பரமேஸ்வரனுக்கு இந்த படம் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதில் இரண்டு டைம்லைன் இருக்கிறது. அதனால் நான் இரண்டு கெட்அப்களில் நடித்துள்ளேன். இதற்கு முன்பு அடிதடி சண்டை என ஆக்ஷன் ஏரியாவுக்குள் சென்று விட்டேன். இந்த படம் உணர்வுகளின் குவியலாக இருக்கும். மொத்த படத்திற்கும் படத்தின் கிளைமாக்ஸ்தான் ஆதாரம். அதை நோக்கியே படமும் செல்லும். கிளைமாக்சும் பேசுப்படுவதாக இருக்கும். நான் நிறைய புது இயக்குனர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்பதை விட அவர்கள் திறமையை, உழைப்பை வெளியில் கொண்டு வர நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குனரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம்,